×

ரூ.10 ஆயிரம் மதிப்புடைய நூல்களை பள்ளி, கல்லூரிக்கு நல்லாசிரியர் நன்கொடை

 

உடுமலை, மார்ச் 11: மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். அதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் வை.விஜயலட்சுமியும் ஒருவர்.

இதில் இருவருக்கு மட்டுமே தேசிய நல்லாசிரியர் வழங்கப்பட்டது. விஜயலட்சுமி உள்ளிட்ட மற்ற ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் எழுத்தறிவு இயக்கம் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அந்த புத்தகங்களை மாணவர்களின் நலன்கருதி தான் பணிபுரியும் உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கும், தான் படித்த கோவை அரசு கலைக்கல்லூரி நூலகத்திற்கும் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இவர் 2020-ல் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். அதன் மூலம் பெறப்பட்ட அந்த பரிசுத் தொகையான ரூ.10 ஆயிரத்தையும் தனது பள்ளி மாணவிகளுக்கே சீருடைகள் வாங்கி வழங்கி உள்ளார். இவரது சேவை மனப்பான்மையை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

The post ரூ.10 ஆயிரம் மதிப்புடைய நூல்களை பள்ளி, கல்லூரிக்கு நல்லாசிரியர் நன்கொடை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Tamil Nadu ,
× RELATED உடுமலையில் கொளுத்தும் வெயில் குளிர்பானங்கள் விற்பனை ஜோர்